மதிய உணவுக்கு பின் சற்று ஓய்வெடுத்தான். விரைவில் அரண்மனைக்குள் செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. மாலை ரஞ்சனா வந்தாள்.
“ அத்தான், இன்று பெரிய பாடம் நடந்ததாமே. மாளிகை முழுவதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு “ என்றாள்.
“ ரஞ்சனா. இங்கு நடப்பதை பற்றி நீ மட்டும் என்னிடம் பேசாதே “ என்றான் கருணாகரன். ரஞ்சனா நகைத்தாள்.
“ சரி நான் இனி எதுவும் பேசவில்லை. இருவரும் ஓரிடம் போகலாமா “ என்றாள்.
“ எங்கே, ஏரிக்கரைக்கா. “
என்று அவளை அனைத்தான்.
“ ம்ஹும். முதலில் வரதராஜன் ஆலயத்துக்கு போகலாம். அதன் பின்.. அதன் பின்.. ஓரிடத்துக்கு போகலாம் “ என்றவள் உள்ளத்தில் காமம் பொங்கியது.
அறையின் மூலையிலிருந்த பெட்டியில் புத்தாடைகளை எடுத்து அவன் முன்பே அணிந்துகொள்ள ஆரம்பித்தாள். அவனுக்கும் பெரும் செல்வந்தர்கள் உடுத்தக்கூடைய விலை உயர்ந்த ஆடைகளை அணிவித்தாள். இந்த கோலத்தில் அவளை பார்க்கும் போது புதிதாக திருமணமான பெண்ணைப் போலவே தோற்றமளிக்க “ ரஞ்சனா, நம் இருவரையும் இப்படி பார்ப்பவர்கள் உன்னை தவறாக நினைக்கமாட்டார்களா “ என்று கேட்டான்.
“ ம்ஹும். உங்களைத்தான் தவறாக நினைப்பார்கள் “ என்று அவனைப் பார்க்காமலே மறுமொழி சொன்னாள்.
“ என்னை ஏன் தவறாக நினைக்கவேண்டும். நீ மணமாகாதவள். பிற ஆடவனுடன் நெருங்கிவருவது உனக்குத் தானே இழுக்கு “
“ இல்லை அத்தான். என்னுடம் வருவதால் உங்களுக்குத்தான் இழுக்கு “ என்று சொன்ன ரஞ்சனாவின் குரல் தழுதழுத்தது. அவள் சொல்வதின் அர்த்தம் புத்தியில் உறைத்ததால் கருணாகரன் எதுவும் சொல்லமுடியாமல் தடுமாறினான். ரஞ்சனா அவன் மார்பில் சாய்ந்தாள்.
“ அத்தான். எதையும் எண்ணாமல் வாருங்கள். உங்களோடு இருக்கும் நாட்களை நான் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன் “ என்றவளை முத்தமிட்டபடியே வெளியே அழைத்துச் சென்றான். குமுதா எதிர்பட்டு வாய் பிளந்தாள்.
“ ரஞ்சனா! உன் கழுத்தில் மட்டும் திருமாங்கல்யமிருந்தால் காண்போர் கையெடுத்து வணங்குவார்கள் “ என்று ஏக்கப்பெருமூச்சு விட்டு சென்றுவிட்டாள். இருவரும் தம்பதிகளை போல மூடுதேரில் ஏறிக்கொள்ள காஞ்சி வரதரஜ பெருமாள் ஆலயத்தை நோக்கி தேர் கடுகிச் சென்றது. தேரின் திரைச்சீலைகளை எடுத்துவிடாமல் திறந்தே வைத்திருந்ததால் காஞ்சியின் வீதிகளை ஆராய்ந்துகொண்டே சென்றான் கருணாகரன்.
மௌனமாகவே ஆலயத்தை அடைந்தார்கள். மக்கள் அதிகமில்லாமல் எங்கும் வீரர்கள் சூழ்ந்திருந்ததால் யாரேனும் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்கள் வரலாம் என்று அச்சத்துடனேயே ரஞ்சனா உள்ளே சென்றாள். இதையெல்லாம் உணராத கருணாகரன் சன்னிதியில் நுழைந்ததுமே உள்ளத்தில் உவகை பொங்க கர்ப்பகிரகத்தில் நுழைந்தான். சிறுவயதில் கண்ட வரதராஜனை பல ஆண்டுகள் கழித்து சேவிக்கும் பாக்கியம் கிட்டியதில் உள்ளம் உருகி கண்களைமூடி வணங்கினான்.
திடீரென்று வெளியே ஆரவாரம் கேட்டது. ரஞ்சனா வாயிலைப் பார்த்தாள். அங்கே தோழியர் புடைசூழ அழகு தேவதையாக சர்வ அலங்காரத்துடன் அன்னநடை நடந்து கர்ப்பகிரகத்தினுள் நுழைந்தாள் சாளுக்கிய இளவரசி காஞ்சனா தேவி. இளவரசியைக் கண்டதும் உள்ளிருந்த ஓரிருவரும் ஒதுங்கிவிட ரஞ்சனாவும் ஒதுங்கினாள். இதையெல்லாம் உணராத கருணாகரன் ஏதேத ஸ்லோகங்களை ஓதிக்கொண்டு சுற்றம் மறந்து பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தான். இளவரசியை வணங்கிக்கொண்டே அவள் வருகையை அவனுக்கு உணர்த்தப்போன ரஞ்சனாவை பார்வையாலே தடுத்த காஞ்சனா தேவி ரஞ்சனா நின்றிருந்த இடத்தில் நின்று பெருமாளை வணங்கினாள்.
இருவரும் அருகருகே நிற்பதை கண்ட ரஞ்சனாவின் மனதில் திடீரென்று ஆயிரமாயிரம் மலர்கள் பூத்தன. கருணாகரனுக்கு ஏற்ற அரசகுமாரி இவள் தான். வரதராஜா இந்த ஜோடியை நீதான் சேர்த்து வைக்க வேண்டுமென்று உள்ளம் உருக பெருமாளை வேண்டினாள். ரஞ்சனாவின் அர்ச்சனையை முடித்துவிட்டு வந்த அர்ச்சகர் ரஞ்சனா எட்ட நின்றதால் அவனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்துவிட்டு திரும்ப “ சுவாமி, எனக்கு பிரசாதம் “ என்று மெல்ல கேட்டாள் ரஞ்சனா.
அர்ச்சகர் அதை காதில் வாங்காமலே சென்று விட்டதால் சுற்றிலும் நிற்பவர்களை அறியாத கருணாகரன், கையிலெடுத்த திருநீரை பக்கத்தில் நின்றவள் நெற்றியில் இட்டான். இட்டவன் அடுத்த கணம் அதிர்ந்துபோய் சிலையாகிவிட உருவப்பட்ட ஆறு வாட்கள் அவன் கழுத்தைச் சுற்றிலும் பதிந்தன.
“ இளவரசி, அவரை மன்னித்துவிடுங்கள். தங்கள் வருகையை அவர் அறியவில்லை. அறியாமல் செய்த தவறை மன்னித்து அருள் புரியுங்கள் “ என்று கண்களில் நீர்வழிய காஞ்சனா தேவியின் காலடியில் வீழ்ந்தாள் ரஞ்சனா. தன் அருகில் நின்றவள் சாளுக்கிய இளவரசியென்றும் தான் திருநீரிட்டதும் அவளுக்கே என்பதுவும் சில வினாடிகள் கழித்தே கருணாகரனுக்கு உறைத்தது. எந்த வினாடியும் தன் ஊட்டியில் பாய்ந்துவிடத்தயாராக இருக்கும் வாட்களை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு சாளுக்கிய இளவரசிக்கு தலை தாழ்த்தி கீழே கிடந்த ரஞ்சனாவை தொட்டு தூக்கியவனை பார்த்து காஞ்சனா தேவி வியந்தாள்.
“ மன்னிக்க வேண்டும் இளவரசி. அறியாமல் தவறு நடந்துவிட்டது “ என்று பதற்றமில்லாமல் அவன் கூற வீரர்களை பார்வையால் அகற்றினாள் காஞ்சனா. அங்கிருந்தவர்களில் தெளிவாக இருந்தது காஞ்சனா தேவியும் கருணாகரனும் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் மூச்சுவிடக்கூட அஞ்சி இழுத்து பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
” ரஞ்சனா.! இவர் யார்? “
என்று வாய் திறந்தாள் காஞ்சனா தேவி. வரதராஜனின் ஆலய மணிக்குகூட அத்தனை கம்பீரம் இருக்குமோ! என்றெண்ணும் அளவுக்கு அவளுடையை குரல் கணீரென்று ஒலித்தாலும் அதில் ஏளனம் கலந்திருப்பதை கருணாகரன் உணர்ந்தேயிருந்தான்.
“ இளவரசி. அவர்.. அவர்.. எங்கள் விருந்தினர்..
“ என்று வார்த்தைகளை மென்று விழுங்கியவள் தன்னுடன் வந்த ஒரே காரணத்துக்காக கருணாகரனின் பெயருக்கு களங்கம் விளைந்துவிட்டதை எண்ணி உள்ளம் வெடிக்க “ஆயினும் உத்தமர் இளவரசி“ என்றவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து தரையை நனைத்தது.
காஞ்சனா தேவி சற்று நேரம் ரஞ்சனாவை உற்றுப்பார்த்தாள். பின் கருணாகரனை ஒரு முறை ஏறிட்டுவிட்டு விடு விடுவென வாசலை நோக்கி நடந்தாள். எதோ நினைத்தவள் சட்டென்று திரும்பி ரஞ்சனாவை அழைக்க ஓடிச்சென்றாள் ரஞ்சனா.! கன்னத்தில் வழிந்த நீரை விரலால் சுண்டிவிட்டு தோளில் கைவைத்தாள். “
அஞ்சாதே.! உன் விருந்தினருக்கு எந்த தீங்கும் விளையாது. “
என்று சொல்லிவிட்டு வேகமாக போய்விட்டாள் காஞ்சனா!
நடந்த நாடகத்தை நம்ப முடியாமல் கருணாகரன் சிலையாக நின்றான். அவன் கையைப்பற்றி இழுத்துகொண்டு ரஞ்சனாவும் வெளியேறினாள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் சாளுக்கிய இளவரசியை சந்திக்க நேரிடும் என்று அவன் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தேரில் இருவரும் அமர, தேரோட்டியிடம் “ ஓடைக்கரைக்கு செல் “ என்று சொன்ன ரஞ்சனா திரைகளை இருபுறமும் மூடிவிட்டு அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.
அவள் உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றுகொண்டிருந்தன. இடையிடையே கருணாகரனின் கரங்களை இறுக்கிப் பிடிக்க அவள் தன்னை குறித்து அச்சமடைகிறாள் என்பதை உணர்ந்த கருணாகரன் “ ரஞ்சனா.! எனக்கு எதுவும் நேராது. “
என்று ஆதரவாக அனைத்தான்.
அவள் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து நீண்ட பெருமூச்சுவிட்டாள். அவள் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டாள் என்பதை கருணாகரன் புரிந்துகொண்டாலும் அவள் வாயாலேயே வரட்டுமென்று அமைதியாக இருந்தான். மாலை மயங்கிக்கொண்டிருந்தது. தேர் நின்றதும் இருவரும் இறங்கினார்கள்.
அங்கே ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருக்க சுற்றிலும் மரங்களும் பல வண்ண மலர்ச்செடிகளும் அந்த இடத்தை ரம்மியமாக அடித்தன. காதல் செய்ய ஏற்ற இடம்தான் என்று கருணாகரன் உள்ளூற எண்ணிக்கொண்டான். மௌனமாகவே இருவரும் ஓடைக்கரையில் நடந்தார்கள். சற்று தூரம் சென்றதும் கருணாகரன் ஒரு மரத்தின் மீது சாய்ந்துகொண்டு நின்றுவிட்டான்.
” ஏன் இங்கே நின்றுவிட்டீர்கள். இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் இளைப்பாற இடமுண்டு “ என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றவள் ஓரிடத்தில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கு நடுவிலிருந்த இடைவெளி வழியாக அவனை அழைத்துச்சென்றாள். சமதளமாக இரு பெரிய பாறை இருந்தது. சுற்றிலும் மரக்கூட்டமிருந்ததால் வெளியே இருப்பவர்களுக்கு உள்ளிருப்பவர்களை காண வாய்ப்பேயில்லை. ரஞ்சனா பாறையின் மீது அமர்ந்தாள்.
“ பஞ்சனை நன்றாக இருக்கிறதா! “
என்று கேட்டுக்கொண்டே அவனையும் அருகில் அமரவைத்து மடியில் கிடத்திக்கொண்டாள்.
“ நமக்கு ஏற்ற இடம்தான். இது உனக்கெப்படி தெரியும் “ என்றவன் சீலை விலக்கி அவளின் மணிவயிற்றில் முத்தமிட்டான்.
“ சில நேரங்களில் தோழிகளுடன் வனபோஜனத்துக்கு இங்கே வருவேன். அப்போது கண்டுபிடித்தது “ என்றவள் குனிந்து நெற்றியில் முத்தமிட்டு கொங்கைகளை முகத்தில் உரசினாள்.
“ நான் காஞ்சி கோட்டையை பார்க்கவந்தேன். நீ காட்டுக்குள் அழைத்துவந்துவிட்டாயே! “
“ இந்த கோட்டையையே முழுவதும் பார்க்கவில்லை. அதற்குள் காஞ்சிகோட்டைக்கு என்ன அவசரம் “ மார்க்கச்சையை மேலேற்றி ஒருபக்க மாங்கனியை வெளியே தள்ளிவிட்டு அவன் இடைக்கச்சைக்குள் கரத்தை விட்டாள்.
முகத்தை தழுவிய செங்கனியின் காம்பில் முரட்டு மீசையை உரசிவிட்டு வெடித்திருந்த காம்பில் நுனி நக்கால் நக்க கோவணத்தை தளர்த்தி தடித்த லிங்கத்தை பிடித்தாள் ரஞ்சனா. சூடான இரும்பைப்போல துடித்த அவன் ஆண்மை அவளின் பெண்மைக்குள் தேன் சுரக்க வைத்தது. காம்பொன்றை சுவைத்துக்கொண்டே இன்னொரு கனியில் சாறு பிழிந்தான். மேலே பிழிந்த கனிச்சாறு யோணிக்குள் ஊற்றெடுக்க ’ம்ம்ம்ம்’மென்று இன்பமாக முனகிக்கொண்டே அவன் தண்டிலும் சாறெடுக்க வேகமாக குலுக்கினாள். அவளது கச்சை இடைஞ்சலாக இருந்ததால் முதுகில் கையை செலுத்தி முடிச்சை அவிழ்க்க முற்பட்டான்.
“ ம்ஹும் வேண்டாம். ஆடைகளை களைய ஏற்ற இடமல்ல “ என்று அவனைத் தடுத்தாள்.
முந்நாள் இரவு காமத்தை அனுபவித்தவள் காலையிலிருந்து தனிமையில் இருந்ததால் காம மோகம் சொல்லுக்கடங்காவண்னம் கூடிப்போயிருந்தது. உடலின் உணர்ச்சி நாளங்கள் அனைத்தும் உஷ்ணமாகிப் போக அவளின் பெருமூச்சும் வேகமாகி கொங்கைகளை அவன் வாய்க்கு வசதியாக அழுத்தினாள். தன்னை நேசிப்பவள் என்ற எண்ணம் கருணாகரனின் ஆண்மையின் விறைப்பை அதிகமாக்கியது.
“ எழுந்திருங்கள். நான் கரும்புன்ன வேண்டும் “ என்றாள். அவனும் எழுந்து மரத்தின் மீது சாய்ந்தவண்ணம் ஆடை விலக்க தண்டை கையிலெடுத்து முத்தமிட்டு புல்லாங்குழல் வாசித்தாள். விதைகளை நக்கினாள். கரும்பைக் கசக்கினாள். சிறு பிள்ளை போல அதை காற்றில் துடிக்க வைத்து விரல்களால் வருடி விளையாடிவிட்டு பின்னர் முழுவதும் வாய்க்குள் விட்டு சப்பினாள். சிறிது நேரத்திலேயே அவள் யோணிக்கு அவரசம் தாங்காமல் போக மரத்தில் சாய்ந்துகொண்டு அவனைப் பார்த்தாள். சீலையை இடுப்புக்கு மேலே தூக்கிவிட்டு தண்டை நுழைத்தான். சில்லென்று வீசிய ஓடையின் காற்றில் இருவரும் சுகமாக புணர்ந்தார்கள்.
“ அத்தான், நீண்ட நேரம் என்னால் முடியாது “ என்று நானினாள். கருணாகரன் அவள் இருமுறை பொங்கியபின் அதிகம் தாமதிக்காமல் உயிர் நீரை புழைக்குள் வடித்தான். இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திகொண்டு அங்கிருந்து வெளியேற நான்கு புரவிகள் அவர்களை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தன.
“ அத்தான், கோட்டை வீரர்கள் வருகிறார்கள். “
என்றாள். அதற்கு முன்பே அவன் கை இடைவாளை பற்றிகொண்டிருந்தது.
“ டேய். உன்னை கைது செய்கிறோம். எங்களுடன் வா “ என்றான் ஒருவன். அவர்கள் நால்வருமே ஆலயத்தில் தன் மீது வாள் வைத்தவர்கள் என்பதை கண நேரத்தில் அறிந்தான் கருணாகரன்.
“ காரணம் ஏதுமில்லாமல் கைது செய்வதுதான் உங்கள் நாட்டின் அறமா “ என்றான் கருணாகரன்.
“ சேந்தா, இவனுக்கு காரணம் வேண்டுமாம். காரணத்தை என் வாள் சொல்லும் “ என்றவன் வாளை உருவினான்.
“ இளவரசியே மன்னித்துவிட்ட பிறகு இப்போது எதற்கு கைது செய்ய வேண்டும் “ என்று சீறினாள் ரஞ்சனா.
“ அட, பெட்டைக்கோழிகளும் காஞ்சியில் கூவ ஆரம்பித்துவிட்டன “ என்று நகைத்தவன் வாளை வீசும் முன்பே அவன் கையிலிருந்த வாள் கண நேரத்தில் பறந்துவிட ‘ ஹா ‘ என்று கூச்சலிட்டு புரவியிலிருந்து விழுந்தான்.
கருணாகரன் ரஞ்சனாவின் தோளை பிடித்து அழுத்த அவள் அப்படியே காலடியில் மண்டியிட்டாள். மற்ற மூவரும் புரவியின் மீதிருந்தே அவன் மீது வாட்களை வீசினார்கள். மூன்று வாட்களையும் அலட்சியமாக தடுத்துவிட்டு ரஞ்சனா தள்ளிச் சென்றதும். அடுத்த தாக்குதலுக்கு தயாரானான். மீண்டும் வீசப்பட்ட மூன்று வாட்களையும் இம்முறை தனது வாளை சுழற்றியபடியே தடுத்தான். ஒருவன் மனிக்கட்டு முறிந்து தொங்கியது. மற்றவர்கள் பீதியால் வாள் வீச்சை மறந்து பின் வாங்கினார்கள். அடுத்த கணம் இரு புரவிகளும் நாலுகால் பாய்ச்சலில் ஒடைக்கரையில் ஓட்டமெடுக்க காயமடைந்த இருவரும் புரவியை இழுத்துக்கொண்டு நடந்தே ஓடினார்கள்.
நான்கு வீரர்களை அதுவும் புரவின் மேலிருப்பவர்களை சில வினாடிகளில் வீழ்த்தி அவனது வீரத்தைக் கண்டு ரஞ்சனா மிதமிஞ்சிய வியப்புற்றாள்.
“ அத்தான், காயம் ஏதுமில்லையே. நீங்கள் வாளை வீசியிருக்கக் கூடாது. முத்திரை மோதிரத்தை காட்டியிருக்கலாமே “ என்றாள்.
“ அவர்கள் கைது செய்ய வரவில்லை ரஞ்சனா. என்னை காயப்படுத்தவே வந்திருக்கிறார்கள். அதனால் தான் வாளெடுக்க வேண்டியதாயிற்று. சரி வா போகலாம் “ என்று இருவரும் நடக்க இன்னுமொரு புரவி அவர்களை நோக்கி கடுகி வந்துகொண்டிருந்தது.
கருணாகரன் தயாரானான். புரவியில் வந்தவன் கீழே குதித்து வாளை உருவ கருணாகரனின் ஓங்கிய வாள் அந்தரத்தில் அப்படியே நின்றது. போர் வீரன் உடையில் அங்கே நின்ற சாளுக்கிய இளாவரசி காஞ்சனாதேவியைக் கண்டதும் வாளை தாழ்த்திவிட்டு வணங்கினான்.
“ இளவரசி. தாங்களா! “
என்று ரஞ்சனாவும் தலை தாழ்த்தினாள். நிலைமை கட்டுக்கு மீறி போய்விட்டது என்று கருணாகரன் நினைத்தான். ஆனால் ரஞ்சனாவோ வரதராஜன் தன் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டாதாக மகிழ்ந்தாள்.
“ வீரரே, ஓங்கிய வாளை வீசுங்கள். சோழர்களின் வீரத்தை நானும் பார்க்கிறேன் “ என்றாள்.
“ வேண்டுமென்றால் என் தலையை இப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். பெண்களிடம் வாள் வீசுவது என் மரபில் கிடையாது “ என்று வாளை உறையில் போட்டான்.
“ உமது படை காஞ்சியை நோக்கி வந்தால் முதலில் என்னைத்தான் சந்திக்க வேண்டும். அப்போது தலையை தானம் செய்துவிட்டு நிற்பீர்களா “ என்று நகைத்தாள்.
“ போர் களத்தின் மரபு வேறு. தனிமனித மரபு வேறு இளவரசி. போர்க்களத்தில் இரண்டு ராஜ்யங்கள் மோதிக்கொள்கின்றன. இங்கே ஒரு ஆணும் பெண்ணும் மோதவேண்டியிருக்கிறது. இருப்பினும் போர்க்களத்தில் கூட நான் உங்களுக்கு எதிராக வாளெடுக்க மாட்டேன் “ என்றான்.
’கையில் கிடைக்கும் பெண்களை கசக்கி நுகரும் சாளுக்கியர்கள் எங்கே. உயிர் போகும் நிலையிலும் மரபு பேசும் இவன் எங்கே’யென்று எண்ணிய காஞ்சனா உணர்ச்சிகளின் வாயிலில் நின்றாள்.
“ உமக்கு காஞ்சியில் என்ன வேலை “ என்று வினவ, கருணாகரன் ரஞ்சனாவை நோக்கினான்.
“ அவளை ஏன் பார்க்கிறீர். நீர்தான் உத்தமர் என்று அவளே சொல்லிவிட்டாள். காஞ்சியில் உமது நோக்கம் ரஞ்சனாவின் பஞ்சனையில் புரள்வது அல்ல என்பது எனக்கும் தெரியும். அப்படியானால் காஞ்சியில் வேவு பார்க்க வந்தீரா? “
என்று பெரும் வெடியை வீசினாள்.
” இல்லை இளவரசி “ என்று ரஞ்சனா இடையில் புகுந்தாலும் அதற்கு மேல் காரணம் சொல்ல முடியாமல் தினறினாள்.
“ நான் காஞ்சியை பார்க்கத்தான் வந்தேன் இளவரசி “ என்று சர்வசாதாரணமாக கூறினான் கருணாகரன்.
“ சோழர்கள் காஞ்சியில் ஒற்றுப்பணி செய்ய மட்டுமே வருகிறார்கள். அத்தோடு தலையையும் இழக்கிறார்கள். இது தெரிந்தும் என்னிடமே அதை ஒப்புக்கொள்ள உமக்கு என்ன தைரியம் “ என்றாள்.
“ உயிருக்கு பயந்தவன் தான் உன்மையை மறைக்க வேண்டும். கருணாகரன் அந்த வம்சத்தில் பிறக்கவில்லை “ என்று உறுதியாக கூறினான்.
’கருணாகரன்.. கருணாகரன்’ என்று முனுமுனுத்தவள் ”கருணாகர தேவன்” என்று முடித்தாள்.
“ ஆம், நான் கருணாகர தேவன் தான். என்னை உங்களுக்கு தெரியுமா? ”
என்று ஆச்சரியமாக கேட்டான்.
“ பொங்கள் விழாவில் சங்கமனை வீழ்த்திய மாவீரனை பரத கண்டமே அறிந்திருக்கும்போது சாளுக்கிய இளவரசி அறியமாட்டாளா? “
என்றவள் குரலில் மரியாதையும் கலந்திருந்ததை மற்ற இருவருமே உணர்ந்தார்கள்.
இத்தனை நேரம் காஞ்சனாதேவின் பார்வையிலிருந்த அதிகாரம் சட்டென்று மறைந்து அங்கே வேறு பல உணர்ச்சிகள் ஆட்கொண்டுவிட்டதை ரஞ்சனா கவனித்தாள். தன் மார்பில் புரண்ட முரட்டு வீரனை காஞ்சனா சட்டென்று பறித்துவிட்டது போல அவள் மனம் கலங்கினாலும், இந்த தெய்வத்தின் கழுத்தில் மாலையாக காஞ்சனாவுக்கே தகுதி இருப்பதாக நினைத்தாள்.
“ தேவரே, எத்தனை ஒற்றர்கள் வந்தாலும் காஞ்சியை பிடிக்க சோழர்களால் முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வீணாக உங்கள் நேரத்தையும் உயிரையும் இங்கே விரயம் செய்ய வேண்டாம். உடனே காஞ்சியை விட்டு போய்விடுங்கள். முடிந்தால் படைதிரட்டி வாருங்கள். போர்க்களத்தில் சந்திக்கலாம். “
என்று உணர்ச்சி பொங்க கூறினாள்.
“ வந்த பணியை முடிக்காமல் கருணாகரன் இங்கிருந்து அகலமாட்டான் என்பதை சாளுக்கிய இளவரசி நினைவில் வைத்துக்கொள்ளட்டும். கருணாகரன் உயிரோடு தஞ்சை திரும்பினால் காஞ்சி வீழ்வது திண்ணம் இளவரசி. நான் வருகிறேன் “ என்றவன் அவளுக்கு தலை வணங்கிவிட்டு அலட்சியமாக ரஞ்சனாவின் கையை பிடித்து “ வா, போகலாம் “ என்றான்.
காஞ்சனாவின் மனதில் ஏதேதோ உணர்ச்சிகள். ஜென்ம எதிரியாக இருந்தாலும் வீரர்களை பிடிக்காத பெண் இருப்பாளா! கருணாகரனின் வீர தீரங்களை கேட்டது முதலே அவள் உள்ளத்தில் அவன் குடியேறிவிட்டதை அவளால் தடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட கருணாகரனை காஞ்சியில் இந்த சூழலில் சந்திப்போம் என்று அவள் கனவில் கூட எண்ணியதில்லை. தன் உள்ளத்தை கொள்ளை கொண்டவன் இன்னொருத்தியுடன் இணைந்திருப்பதை பார்த்து உள்ளம் குமுறினாலும் தான் கொண்டது நிறைவேறாத ஆசை என்பதை அவளும் உணர்ந்தேயிருந்தாள்.
“ ரஞ்சனா. அவர் போகட்டும். உன்னிடம் தனித்து பேசவேண்டும் “ என்று சொன்னதும் கருணாகரன் அவளை ஒரு வினாடி உற்று பார்த்துவிட்டு விடு விடுவென்று நடந்தான்.
ரஞ்சனா இனம் புரியாத உணர்ச்சிகளால் கட்டுண்டு கிடந்தாள். சிறு வயது முதலே ரஞ்சனாவை அறிந்தவள் என்பதால் காஞ்சனாவுக்கு அவள் மீது அன்பிருந்தது. காஞ்சனா அவளை மேலும் கீழும் பார்த்தாள். கூந்தல் களைந்து, ஆடைகள் சரியாக உடுத்தாமல் கசங்கியிருந்தன. கச்சை கூட சரியாக கட்டாமல் சற்றே விலகியிருப்பதை இளவரசி கவனித்து விட்டதை எண்ணி ரஞ்சனா நானத்தால் நெளிந்தாள். இளவரசி அவள் அருகில் சென்று நட்போடு தோளில் கை வைத்தாள்.
“ உத்தரவிடுங்கள் இளவரசி “ ரஞ்சனாவின் உதடுகள் துடித்தன.
“ உத்தமர் என்று சொன்னாய். உத்தமரும் நீயும் இந்த அடவிக்குள் என்ன செய்கிறீர்கள் ரஞ்சனா.?
“ காஞ்சனாவின் குரலில் ஏமாற்றமும் வெறுப்பும் இருந்தது.
“ இளவரசி. அவர் இதற்காக வந்தவரல்ல. என்னிடம் இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் “ என்றாள்.
“ இன்பநாயகி தன் பெண்ணை யாருக்கும் கொடுக்காமல் பொத்தி பொத்தி வளர்ப்பதாக ஊரெங்கும் பேச்சு. அப்படிபட்ட உன்னை இவருக்கு தாரை வார்த்துவிட்டாளா உன் அன்னை. சரி போகட்டும். நீயாவது உன் அன்னை போலில்லாமல் ஒருவனோடு வாழ்ந்து உன் பாதையை நேர்படுத்திக்கொள். அவரை உடனே காஞ்சியை விட்டு அகற்றிவிடு. மகாராணிக்கு தெரிந்தால் என்னால் கூட அவரை காப்பாற்ற முடியாது. நீயும் அவருடனே சென்றுவிடு ரஞ்சனா. உன் வாழ்வாவது நல்ல பாதையில் செல்லட்டும் “ என்று சொன்னாள். அவன் மீது காஞ்சனாவுக்கும் காதல் இருப்பதை அவளின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்திலேயே ரஞ்சனா புரிந்துகொண்டாள்.
“ இளவரசி. அவரை இங்கிருந்து அகற்றுவது என்னால் முடியாத காரியம். அதை தாங்களும் அறிவீர்கள். மேலும் ..
மேலும்..
“ என்று சொல்ல முடியாமல் தினறினாள்.
“ சொல்ல வந்ததை தைரியமாகச் சொல் ரஞ்சனா “
“ மேலும். அவருக்கு பொறுத்தமானவர் தாங்கள் தான் இளவரசி. நான் வருகிறேன் “ என்று அவளுடைய உத்தரவுக்கு கூட காத்திராமல் கருணாகரன் சென்ற திசையில் வேகமாக சென்றுவிட்டாள்.
எனக்குள்ளிருக்கும் காதல் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று காஞ்சனா திகைத்தாள். என்னதான் உறவுகொண்டாளும் இவள் தாசிகுலத்தை சேர்ந்தவள். அவள் சொல்வது போல கருணாகரன் கைபிடிக்க இவளுக்கு எந்த தகுதியும் இல்லைதான். இருப்பினும் சோழனாகிய அவன் எங்கே. சாளுக்கிய வம்சத்தில் பிறந்த நான் எங்கே. இதெல்லாம் நடக்குமா.! என்று பெருமூச்சுவிட்டவள் புரவியில் தாவி கடுகிச் சென்றாள்.
0 Comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!